Posted by: barthee | January 8, 2012

இலங்கையில் மிக பிரபலமானதும் அதிக வாசகர்களை கொண்டதுமான வீரகேசரி பத்திரிகையின் ஞாயிறுபத்திரிகையில் (08.01.2012) வல்வை புளுஸ்கழகத்தின் ஐம்பதாவதுஆண்டு நிறைவுக்காக வெளியிடப்பட்ட பொன்விழா மலரை பற்றிய சிறிய அறிமுகமும் ஆக்கமும் வெளிவந்துள்ளது. எமது உறவுகளுக்கு இதனை நாம் பெருமையுடன் வழங்குகின்றோம்.

Posted by: barthee | April 9, 2011

வல்வை புளுஸ் 50வது வருடம்(1961-2011)
பொன்விழா மலர் வெளியீடு
முக்கியஅறிவித்தல்
வல்வை புளுஸ் விளையாட்டுக கழகம் இலங்கைத்தீவின் விளையாட்டு அரங்கில் மிக ஆழமாக பெயர் பொறித்த கழகமாகும். இந்த ஆண்டு வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்துக்கு 50வது ஆண்டு நிறைவு வருடமாகும். கடந்த 50வருடங்களாக நீலநிற சீருடை அணிந்த வல்வை புளுஸ் வீரர்கள் தாயகத்திலும், புலத்திலும் ஒரு மிகப்பெரிய விளையாட்டுச் சக்தியாக தங்களை நிரூபித்தவாறு விளையாடி வருகிறார்கள். வல்வெட்டித்துறை என்றால் நினைவுக்குவரும் அதன் அடையாளங்களில் வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகமும் ஒன்றாகும்.
கடந்த 50வருடங்களாக மூன்று தலைமுறை வீரர்கள் வல்வைபுளுஸ் விளையாட்டுக் கழகத்துக்காக மைதானங்களில் விளையாடிவருகிறார்கள். இந்த 50வருடங்களில் வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்ட வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும், இன்னும் உயிர்ப்புடன் இயங்கிவரும் அதன் மனோதிடத்துக்கும் பின்னால் ஏராளம் வல்வைபுளுஸ் வீரர்களின் வரலாறு எழுந்துநிற்கிறது. இந்த 50வது வருடத்துநிறைவின்போது வல்வைபுளுஸ் விளையாட்டுக்கழகம் பற்றிய ஒரு மிகப்பெரிய ஆவணம் ஒன்றை தயாரிக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். இந்த ஆவணம் என்றென்றும் வல்வையர் பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய ஒரு முக்கியமானதாக விளங்கும்.
இந்த பொன்விழா மலரில், வல்வை புளுஸ் விளையாட்டுக்கழகத்தில் விளையாடிய, விளையாடிக்கொண்டிருக்கின்ற அனைத்து வீரர்களின்
1) விபரங்கள் (புகைப்படத்துடன்)
2) விளையாடிய போட்டிகள்
3) படைத்த சாதனைகள்
4) அரிய புகைப்படங்கள்
5) வல்வையின்ன் வீரர்கள் ஏனைய விளையாட்டுத்துறைகளில் படைத்த சாதனைகள்
6) சிறப்பு கட்டுரைகள்
என்பனவற்றை வல்வையில் இருந்தும் புலம்பெயர்தேசத்தில் வல்வையர்வாழும் அனைத்து தேசங்களில் இருந்தும் பெற்று ஆவணப்படுத்தி ஒரு புத்தகமாக வருகின்ற யூலை மாதமளவில் வெளியிட உள்ளோம். எனவே
அன்புக்குரிய வல்வை மக்களே !!!
நீங்களோ, உங்களுடைய உறவினர்களோ அல்லது உங்களுடைய நண்பர்களோ இலங்கையிலோ அல்லது வெளிநாடுகளிலோ, வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்திற்காக உதைபந்தாட்டம் அல்லது கரப்பந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றி இருந்தால் தயவு செய்து புகைப்படத்துடன் விபரங்களை 30.04.2011 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக் கூடியவாறு கீழ் வரும் email முகவரிக்கு அனுப்பிவைக்கவும்Valvai50@hotmail.co.uk

வல்வை மக்களின் ஒன்றுகூடல் நடைபெறும் இடம்
Downs View Parks, Keele and Sheppard

தொடர்புகளுக்கு:
= வல்வை நலன்புரிச்சங்கம்=
சுரேஸ் 516 843 5687
முரளி 416 418 2734
செல்வம் 416 562 8451

View Larger Map

பார்க்கவே மனதுக்கு கஸ்டமாக இருக்கின்றது சில காட்சிகள்.

 உடையவன் இல்லாவிட்டால் ஒரு முளம் கம்மி

என்னும் பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகின்றது.

nediyakadu_temple

19ம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டகளில் பிள்ளையார், வயிரவர் என்று அழைக்கப் பெற்ற ஒரு சைவ ஆசாரசீலர் தற்போதைய கோயில் தெற்கு வீதியில் அமைக்கப் பெற்றிருந்த மடத்தில் பிள்ளையாரை எழுந்தருளச் செய்த சில காலத்திற்குள் வேதாரணியத்தில் இருந்து கணபதி ஐயர் என்ற பெயருடைய ஒரு சைவக் குருக்களை அழைத்து வந்து பூஜைகள் செய்வித்து வந்தாரெனத் தெரிய வருகிறது.

பூஜைகள் சிவஸ்ரீ தியாகையர் அவர்களாலும் நடத்தப் பெற்று வந்தன.அக்காலங்களில் கப்பல் வாணிபம் தொடங்கப் பெற்று செல்வனே நடந்து வந்ததால் கப்பற்தொழில் சம்பந்தப்பட்ட எல்லோரிடமிருந்தும் மகமைகள் வசூலிக்கப் பெற்று கோயிலுக்கு சேர்க்கப் பெற்று வந்தன.

01.02.1846ல் பிரசித்த நொத்தாரிசு கே.கணபதிப்பிள்ளை முன்னிலையில் எழுதப் பெற்ற உறுதியாலும் மகமை தொகையில் என்ன விழுக்காடு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்கிற விபரம் தெளிவாக காட்டப்பட்டிருக்கிறது. இவ்வுறுதிக்ள ஊரிலுள்ள பல பெரியார்கள் முடித்துக் கொடுத்திருக்கிறார்கள். மகமைகள் வசூலிப்பதும் செலவு செய்வதும் பெரியவர் திருமேனியார் வெங்கடாசல பிள்ளை உட்பட ஐவர் கொண்ட ஒரு குழுவினரிடம் ஒப்படைக்கப் பெற்றது. அப்போது பிள்ளையார் கோயிலுக்கு ஆறுமுகம் முருகுப்பிள்ளை என்னும் பெரியார் மணியமாயிருந்தார்.

1867ம் ஆண்டு சிவன்கோயில் சங்குத்தாபனம் செய்யப் பெற்ற இரண்டு ஆண்டுகளில் திரு. வெங்கடாசலம் பிள்ளை சிவன் கோயில் திருப்பணியோடு ஒன்றி விட்டமையால் அவர் பிற கோயில்களின் வேலைகளில் இருந்து விலகி விட்டார். இக்கால கட்டத்தில் கந்தக் குட்டியார் வேலுப்பிள்ளை என்னும் சைவஆசாரசீலர் பிள்ளையார் கோயில் மேற்பார்வையாளரானார். இவர் பிள்ளையாரை முடிந்த வரை ஆகமவிதிப்படி அமைவாகக் கட்டப்பெற்ற கோயிலில் எழுந்தருளச் செய்ய வேண்டு மென உறுதி பூண்டார். சிறிது சிறிதாக மூலஸ்தானம் தம்ப மண்டபம், மதில் முதலியவை கட்டி பிள்ளையாரை மூலஸ்தானத்தில் எழுந்தருளச் செய்து 1884ல் பிரதிட்டா அபிஷேகம் செய்வித்தார்கள். இவருக்கு ஆண் பிள்ளைகள் இல்லாமையால் தன் சகோதரி மகளின் கணவர் சண்முகம் பிள்ளையை தன்னுடைய திருப்பணி வேலைகளில் சேர்த்துக் கொண்டார்கள் கொடித்தம்பம் நிறுத்தித்தேரும் செய்வித்து 1892 – 1912ம் ஆண்டுக்கிடையில் வருடாந்தர பெருந்திருவிழாவையும் தொடக்கி வைத்தார்கள்.

vvt4

அவர்கள் 1912ம் ஆண்டளவில் கந்தக் குட்டியார் கதிரிப்பிள்ளை நடராசா என்னும் பெரியாரிடம் கோயில் மேற்பார்வையை ஒப்படைத்தார்கள். நடராசா அவர்கள் தம்ப மண்டபத்தையும் கட்டி முடித்தரர்கள். திருச்சிற்றப்பலப்பிள்ளையார். ஊஞ்சல் பராக்குபாக்களைக் கொண்ட ஒரு சிறு நூலையும் 1916ம் ஆண்டு மதுரையில் பதிப்பித்தார்கள்.

1918ம் ஆண்டில் கோயில் பரிபாலனம் இவரின் தமையனார் க.க. அருளம்பலம் அவர்களிடம் சேர்ந்தது.

1930 – 1933ம் ஆண்டுகளில் செல்லையா தில்லையம்பலமும் ஆறுமுகம் விசுவலிங்கமும் ஒருவர் பின் ஒருவராக கோயிலை பரிபாலித்து வந்தார்கள்.

1933 – 1937ம் ஆண்டுகளில் ம.சாம் பசிவம்மணியம் ஆனார். இவர் காலத்தில் சுற்றுமதில் வேலை நடந்தது. அவர் விலகிக் கொள்ள பொ.தங்கவேலாயுதம் அவர்கள் மணியமானார். இவர் காலத்தில் கோபுரத்தின் கீழ் பகுதி திரு கார்த்திகேசு (ஓவசியர்) பெண் சகுந்தலையம்மாவாலும் கட்டி முடிக்கப்பட்டது.

1905ம் ஆண்டளவில் திரு நா.செல்வமாணிக்கம் அவர்களிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கோயில் தொண்டில் தம்முடைய முழுச்செயலையும் சிந்தனையும் அர்ப்பணித்தார்கள்.

1950 – 1970ம் ஆண்டுகளில் வல்வை பொருளாதாரத்தில் சிறந்திருந்தது. இச்சிறப்பையும் வளர்ச்சியையும் நன்கு அவர் பயன்படுத்திக் கொண்டார். மூலஸ்தானத்தையும் திருச்சபையையும் வள்ளி தெய்வானை சமேதரராக முருகக் கடவுளுக்கும் புதிய கோயில் கட்டப் பெற்றது. நாகதம்பிரான் கோயில் மேலுள்ள பதுமபீடம் விமான வேலையாய் முடிக்கப் பெற்றது. பொது மக்களையும் அப்போதைக்கப் போது கண்டு பேசி பணம் திரட்டும் வேலையில் அயராது உழைத்த பணி திரு நா.செல்லமாணிக்கம் (அப்பா) அவர்களையெ சாரும். இவை யாவும் கவினுறச் செய்யப் பெற்ற பின்பு கும்பாபிஷேகம் 07.06.1970ல் சிறப்புற நடந்தேறியது. அதைச் சிறப்பிக்க திருமுருக கிருபானந்த வாரியார் சிறப்பு பிரசங்கம் செய்தார்.

கோயிலின் பகுதி திருப்பணி செய்தவர்கள்

  1. கர்ப்பகிரகம்                                                                               ஆ.செல்லத்துரையும் பெண் தங்கரெத்தினமும்
  2. திருச்சபை -
    வ.வ. இராமசாமிப்பிள்ளையும் பிள்ளைகளும்
  3. நிருத்த மண்டபம்
    வ.வ. இராமசாமிப்பிள்ளையும்பிள்ளையும் பெண் இராசம்மாளும், நா.செல்வமாணிக்கமும் பெண் வள்ளி நாயகியும
  4. நாகதம்பிரான் -
    பொன்னம்பலமும் பெண் அன்னப்பிள்ளையும்
  5. 1970ல் புதிதாக கட்டப்பெற்ற முருகையா
    அ. துரைராசாவும் பெண் இராஜேஸ்வரியும், அ.சிற்றம்பலமும் பெண் பார்வதியும
  6. யாகசாலை
    ம.சாம்பசிவமும் பிள்ளைகளும்
  7. வயிரவர்
    திரு சரவண பெருமாள்
  8. வசந்தமண்டபம்
    வே. இராமவேலுப்பிள்ளையும் பெண் இராசரத்தினம்
  9. பூந்தோட்டக்கிணறு, தண்ணீர் தொட்டி -
    செ. காஞ்சிமாவழவேலும் பெண் சௌந்தரியும்
  10. மணிக்கூட்டுக் கோபுரம் -
    க.வயிரமுத்து நாகப+~ணி அம்மாள்
  11. தீர்த்தக்கிணறு -
    அ.மாரி முத்துவும் நாகம்மாளும
  12. மடப்பள்ளிக்கிணறு -
    மு.மா. பாலசிங்கம்
  13. பூங்காவன மண்டபம்
    செ.வி.நடராசா, சி.பரம்சோதி, ஐ.காத்தாமுத்து
  14. 1978ல் கட்டப்பட்ட மோர்மடம்
    தியாகராசா தேவசிகாமணி
  15. இராஜகோபுரம் அடிப்பாகம்
    கார்த்திகேசு ஒவசியர் மேல்பாகம் செ.கந்தசாமி (கட்டி அப்பா) அவர்களும் வல்வை மக்களும்
  16. பஞ்சமுகப்பிள்ளையார் -
    1979ல் பூ.க. முத்துக் குமாரசாமி
  17. தேர்முட்டி -
    அ.சி.விஷ்ணு சுந்தரம் -
  18. வெளிக்கிணறு -
    தா.சண்முகதாஸ்
  19. கிழக்கு வீதிமடம் -
    ஓவசியர் க.பொன்னம்பலம்
  20. நவக்கிரகம் -
    சவுதி அரேபியாவில் தொழில் புரிந்த வல்வை இளைஞர்கள்
  21. வன்னிவிநாயகர் -
    சண்முகம்பிள்ளை ஞானமூர்த்தி
Posted by: barthee | September 6, 2009

சிவன் கோயில்

யாழ்ப்பாணத்து வல்வெட்டித்துறை என்னும் பேரூரின் புகழை ஓங்கச் செய்து மிளிர்ந்து கொண்டிருப்பது அங்குள்ள சிவன் கோயிலாகும். கோயில்களுடன் தம் பெயரைப் பினைத்து புகழெய்தியவர் மகனார் பெரியதம்பியார் என்னும் காரணப்பெயர் பெற்ற வேங்கடாசலப் பிள்ளை. இப்பெரியதம்பியார் சித்திரபானு ஆண்டு மார்கழித்திங்கள் 6ம் நாள் (19.12.1822) வல்வையம் பதியில் பிறந்தார்.

 இவர் தந்தையார் வேலாயுதர் திருமேனியார் வல்வையம்பதியின் திருசிற்றம்பலப் பிள்ளையார் கோயிலுக்குத் தருமகர்த்தாவாக இருந்து அதனை வேறு சில பெரியார்களிடம் ஒப்படைத்து, வல்வை முத்துமாரி அம்மன் கோயிலுக்கு தருமகர்த்தாவாக ஆயினார். இத்திருமேனியார் சிவபதமெய்தவே இவர் தமையன் மகன் சங்கரியார் தருமகர்த்தாவாயினர். இச்சங்கரியாரே அம்மன் கோயிலில் இப்போதுள்ள (பழமை வாய்ந்த) சப்பரத்தைச் செய்வித்தவர். திருமேனியார் பெரியதம்பியார் இப்போது உள்ள சுற்று மதிலையும் அமைத்தார்.

அம்மன் கோயில் நடாத்தி வருங்காலத்தில் ஒருநாள் திருமேனியார் தமது மகன் பெரியதம்பியார் கனவில் தோன்றி சிவனுக்கு கோயிலெடுக்கும்படி பணித்தார். பெரியதம்பியார் தமக்குப் பரம்பரையாக வந்த தோட்டங்கள் வயல்களைத் திருத்தி பயிரிட்டும் புதிய பல காணிகளை விலைக்கு வாங்கியும் செல்வத்தைப் பெருக்கினார். பன்னிரெண்டு கப்பல்கள் அமைத்து கடல் வணிகஞ் செய்து டிபரு வணிகப்பிரபு ஆகினார். முதன் முதலாக பெரியவர் அம்மன் கோயிலுக்குத் தெற்கேயுள்ள 60 பரப்பு காணியை விலைக்கு வாங்கினார். இக்காணி கல் நிரம்பியும், கரடுமுரடானதாயும், பற்றையும் செடிகளும் நிரம்பியதாயும் இருந்தது. பெரியவர் அம்மன் கோயிலுக்கு தென்கிழக்கேயுள்ள மடத்தில் இருந்து கொண்டு மேற்படி காணியை துப்புரவு செய்து கொண்டு அருள்மிகு வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரப் பெருமானுக்கும் கோயில் கட்டுவதற்காக 1867ம் ஆண்டு அத்திவாரம் இடுதலாகிய சங்கத்தாபனத்தை செய்வித்தார்.

சிறந்த சிற்பிகள் பலவகைக் கம்பியர் இந்தியாவிலிருந்து வந்து கோயில் வேலைகள இடம்  பெறச் செய்தனர். அக்காலத்தில் பிரபுவாயிருந்த விசுவநாதர் என்னும் பெரியார் காசிக்குச் சென்று அங்கிருந்து சிவலிங்கத்தைக் கொண்டு வந்து சேர்த்தார்.

புனராவர்த்தன சம்புரோட்சண கும்பாபிஷேகம் பிலவங்க வருடம் வைகாசி மாதம் 28ம் திகதியான 11.06.1967ல் வெகுசிறப்பாக பக்தி சிரத்தையுடன் நடந்தேறியது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் முன்னால் பெரும் பெரும் தெருவை இணைக்கும் சிவபுர வீதி திறக்கப்பட்டது.

அதற்கு அதை அண்டிய மக்கள் தங்கள் நிலத்தை அன்பு உபகாரம் செய்தார்கள். வசந்தமண்டபம் வாசலுக்குத் தெற்கேயுள்ள பகுதியையும் அம்மன் வாசலையும் இணைத்து இரண்டாம் வீதியை பெரியார் வி.சுப்பிரமணியம், எஸ்.எஸ். சண்முகம் இருவரும் நல்லமுறையில் மூடிக்கட்டிய திருப்பணியை 1970ம் ஆண்டில் நிறைவேற்றினார்கள். திரு மா.குமாரசாமி அவர்கள் ஆறுமுகசுவாமி விக்கிரத்தையும் வள்ளி தெய்வானை விக்கிரகங்களையும் பஞ்ச லோகத்தில் அழகாக செய்வித்து நடராஜர் மண்டபத்தில் 1977ம் ஆண்டுத் தைப்பூசதினத்தில் ஆகமவிதிப்படி பிரதிட்டை செய்தலாகிய திருப்பணியை நிறைவேற்றினார்.

வல்வெட்டிப் பெருமக்கள் சிவனுக்கு அழகுற சித்திரத் தேரை செய்வித்தார்கள். அவர்கள் தான் தேர்த்திருவிழாவை வருடாவருடம் யாழ்குடாநாட்டின், தென் இந்தியாவின் பிரபல நாதஸ்வர இன்னிசை விற்பனர்களுடன் பெரும் செலவுடன் நடாத்துகிறார்கள். பெரியார் எஸ். வைரமுத்து எம்பெருமானுக்கு வெள்ளி இடபவாகனம் சிறந்த முறையில் அமைத்து உள்ளார்.

திரு கார்வண்ணசாமி அவர்கள் தனது உபயமாக ஐம்பொனிலான மகாவிஷ்ணு விக்கிரகத்தையும் திரு கே.இரத்தினசிங்கம் அவர்கள் சரஸ்வதியையும் பிரதி~;டை செய்து உள்ளார்கள். வல்வை சிவன் கோயில்

 

குரு பரம்பரை

குரு பரம்பரை முதலாவது கும்பாபிஷேகம் 1883ம் ஆண்டு சுபானுவருடம் வைகாசி 27ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை அக்காலத்தில் பிரசித்தி பெற்ற குமாரசாமிகுருக்கள் நடாத்தி வைத்தார். அன்று தொடக்கம் பருத்தித்துறையைச் சேர்ந்த சண்முகக்குருக்கள் அவர்கள் பூசைகளை நடாத்தி வந்தார்கள். 1908ம் ஆண்டு தொடக்கம் நீர்வேலியில் ஜனனமும், கோப்பாயில் வாசம் செய்தவரும் ஆரியதிராவிட மொழியில் திறமை உடையவரும் கிரியா விற்பன்னரும், குரு இலட்சணம் நிறைந்தவருமான கார்த்திகேசுக்குருக்கள் அவர்கள் அக்கால எஜமான் அவர்களால் நியமிக்கப்பட்டார். இவர் தொடர்ச்சியாக 24 ஆண்டுகள் ப+சை உற்சவம் பிரதிஸ்டை முதலியவற்றைச் செய்து வந்தார். இவருடைய காலத்தில் 1919ம் ஆண்டு புனராவர்த்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் இவருடைய சிறிய தந்தையார் இராமலிங்க குருக்கள் (மாப்பிள்ளைக்குருக்கள்) இவருடைய விருப்பப்பழ பிரதான ஆசாரியாராக இருந்து கும்பாபிஷேகம் செய்தார். அதன்மேல் இவருடைய் மகன் நீலகண்டக்குருக்கள் (சின்னப்பாக்குருக்கள்) இவருடன் கூட இருந்து பூசைகளை நடாத்தி வந்தார்கள். 1930ல் கார்த்திகேசுக்குருக்கள் இறைவனடி சேர்ந்தார். அதன் மேல் நீலகண்டக்குருக்களே பிரதான ஆசாரியராக இருந்து கோயில் பூஜா கருமங்களை நடாத்தி வந்தார். இவருடன் இவரது மகன் பரமேசுவரக்குருக்கள் 1942ம் ஆண்டு உதவியாக இருந்து பூஜைகளைச் செய்து வந்தார். 1954ம் ஆண்டு நீலகண்டக் குருக்கள் இறைவனடி சேர்ந்தார். தற்போது அவரின் மூத்தமகன் மனோகரக்குருக்கள் நடாத்தி வந்தார் .

Posted by: barthee | September 2, 2009

வல்வைக்கீதம்

வல்வை நகரசபை உபதலைவரும், நாடகம், விளையாட்டுத்துறை போன்ற கலையம்சங்களினால் வல்வக்குப் பெருமை சேர்த்தவருமாகிய திரு.பொ.வேலும்மயிலு (சிவபெருமான்) அவர்களால் இப்பாடல் ஆக்கம் பெற்றது.

Posted by: barthee | August 31, 2009

சிதம்பரக் கல்லூரி

இவ் ஆங்கில வித்தியாசாலை வல்வைப் பெரியாராகிய கு. சிதம்பரப்பிள்ளையவர்களால் 1896ல் தொடங்கப் பெற்று ஆலடியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாடசாலை தொடங்குவதற்கு முதல்நாள் மாலை சிதம்பரப்பிள்ளை அவர்கள் வல்வையில் உள்ள பெற்றோர்களை நெடிய காட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வீதியில் ஒரு கூட்டத்திற்கு அழைத்து உருக்கமான சொற்பொழிவாற்றினார். அதில் அவர் ஷதான் ஒரு சிறிய குடும்பத்தைச் சேர்ந்தவரென்றும் ஆங்கிலம் படிக்க ஆசைப்பட்டும் இவ் ஊரில் இந்த வசதி இல்லாததால் பருத்தித்துறைக்கு ஒவ்வொரு நாளும் காலையில் நடந்து சென்று மதிய உணவிற்கு சந்தையில் கிடைக்கும் மரவள்ளிக் கிழங்கை இரண்டு சதத்திற்கு வாங்கி சாப்பிட்டு மாலையிலும் நடந்து வந்து மிகவும் கஸ்டத்தோடு ஆங்கிலம் கற்று அரசாங்க வேலையிலும் சேர்ந்ததாகவும் தான் பட்ட கஸ்டம் மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக இவ்வூரில் ஆங்கில வித்தியாசாலையை ஆரம்பிப்பதாகவும் அதற்கு ஊரவர்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இப்போது அப்பாடசாலை அவர் நினைவாக சிதம்பராக் கல்லூரியாக வளர்ந்திருக்கின்றது

1912ம் ஆண்டு பள்ளிக்கூட வளர்ச்சியினால் இடம்போதாமை காரணமாக ஆலடியிலிருந்து ஊரிக்காட்டுக்கு மாற்றப்பட்டது. சிதம்பரப்பிள்ளை அமரராகி விடவே பாடசாலையின் முகாமைத்துவம் திரு ஞானசேகரப்பிள்ளை தையல்பாகர் அவர்களிடம் வந்து சேர்ந்தது. இவர்களின் மேற்பார்வையில் 1925ம் ஆண்டளவில் திரு வானமலை ஐயங்கார் அவர்கள் (பி.ஏ. சென்னை) அதிபராக நியமிக்கப்பட்டார். பின்பு திரு கிருஸ்ண ஐயர் (பி.ஏ) அவர்களும் ஆசிரியராகச் சேர்ந்து கொண்டார். பாடசாலை அதிதுரிதமாக வளரத் தொடங்கியதும் வருடம் ஒரு வகுப்பாக உயர்ந்தது. திரு சிவசைலம்ஐயர் (பி.ஏ.சென்னை) திரு பு.க.முத்துக்குமாரசாமி (பி.ஏ.இரங்கூன்) அவர்களும் திரு அரியரத்தினம் உடுப்பிட்டி, திரு இரத்தினம் உடுப்பிட்டி, திரு நடராசா (பி.ஏ) பொலிகண்டி, திரு நடராசா ஊரிக்காடு, திரு ச. சத்தியமூர்த்தி (பி.எஸ்.சி.) திரு ச.வல்லிபரம் (பி.எஸ்.சி.) இவர்களின் சேவையால் பாடசாலையும் வல்வை மக்களும் வளர்ந்தனர். 1948 தொடக்கம் 1960 வரையில் கல்விப் பொதுத்தராதர சாதாரண வகுப்பில் சித்தியடைந்த சகல மாணவர்களும் உடனுக்குட்ன அரசசேவையில் சேர்ந்தனர். திரு தையல்பாகர் அவர்களின் மகன் திரு அருள்சுந்தரம் அதிபராக பலகாலம் கடமையாற்றினார். பின்னர் திரு ச.சத்தியமூர்த்தி அவர்களும் அதன் பின்னர் பலகாலம் திரு கோ.செல்வவிநாயகம்  அதன் பின்னர்  திரு யோகச்சந்திரன் அவர்கள் அதிபராக இருந்துள்ளார்கள்.

 அதன் பின்னர்  05.02.2010  முதல் தற்போது வரை திரு.G.கிருஸ்னகுமார் அவர்கள்  அதிபராக இருக்கின்றார்

இக்கல்லூரியில் தொண்டமானாறு பொலிகண்டி, திக்கம், கம்பர்மலை, வல்வெட்டி போன்ற அயல் கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். வல்வையைப் பிறப்பிடமாகவும் யாழ்.நகரில் பிரபல வர்த்தகருமான திரு செ.கந்தசாமிதுரை (கட்டிஅப்பா) தனது தந்தையார் நினைவாக (டாக்டர் வி.கே. செல்லையா) ரூபா 50,000 வைப்புநிதியில் வைத்து அதனால் வரும் வருட வட்டி இரசாயன பாடத்தில் முதன்மையாக வந்து (உயர்தரம்) பல்கலைக்கழகம் புகும் மாணவர்களுக்கு அளிக்கும்படி கொடுத்துள்ளார். 1967ம் ஆண்டு இருமாடிக்கட்டிடம் அமைக்கப்பட்டது. இதற்கு சிதம்பராக்கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கமும், திருகோணமலை பழைய மாணவர் சங்கமும் வல்வை பொதுமக்களின் சங்கமும் முன்னின்று உதவி புரிந்தன.

பாடசாலையில் உயர்கல்வியைத் தொடர முடியாது விலகிய மாணவர்களுக்கு வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றைப் பழுதுபார்த்தல் பயிற்சியினை நடாத்துகின்றார்கள். வல்வை கல்வி அபிவிருத்திச்சங்கம் என்ற பெயரில் டாக்டர் எஸ்.ராசேந்திரன் அவர்களும் திரு ரி.யோகசபாதிபிள்ளை அவர்களும் ஒரு லட்சம் ரூபா வரை நன்கொடை அளித்திருந்தனர். கனடா வல்வை நலன்புரிச் சங்கமும் வருடா வருடம் தமது பங்களிப்பைச் செலுத்தி வருகின்றது.

(வல்வைநகர் வலைப்பதிவில் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டது. நன்றி)

ஆவலர்களிடம் இருந்து தகவல்கள் புகைப்படங்கள் எதிர்பார்ககப்படுகின்றது.

Older Posts »

Categories

Follow

Get every new post delivered to your Inbox.